ஞாயிறு, 27 ஆகஸ்ட், 2017

ஸ்ரீ சாயிபாபாவின் பதினொரு உபதேச மொழிகள்





1. ஷீரடி ஸ்தலத்தை எவன் மிதிக்கிறானோ, அவனுடைய துன்பம் ஒரு முடிவை அடைந்து சௌகர்யத்தை அடைகிறான்.
2. துவாரகாமாயீயை அடைந்த மாத்திரத்தில் பெரும் துன்பத்திற்கு உள்ளானவர்களும் மிகுதியான சந்தோஷத்தை அடைவார்கள்.
3. இவ்வுலகை விட்ட பிறகும் சர்வ சக்தியுடன் வேலை செய்வேன்.
4. என்னுடைய மசூதி என் பக்தர்களுக்கு அநேக ஆசிர்வாதங்களையும், புத்திமதிகளையும் கொடுக்கும்.
5. என்னுடைய பூத உடல் என் மசூதியிலிருந்து பேசும்.
6. என்னுடைய மசூதியிலிருந்து கொண்டே நான் மிகவும் சுறுசுறுப்பாகவும் தீவிரமாகவும் இருப்பேன்.
7. என்னிடம் வருபவர்களுக்கும் என்னை தஞ்சம் அடைபவர்களுக்கும், என் உபதேசத்திற்காக என்னிடம் தீவிர நம்பிக்கை உள்ளவர்களுக்கும் நான் எப்பொழுதும் உயிருடன் இருக்கிறேன்.
8. நீ என்னை அடைந்தால் நான் உன்னை கடாஷிக்கிறேன்.
9. நீ என் பேரில் உன் பளுவை சுமத்தினால் நான் நிச்சயமாக அதை தாங்குவேன்.
10. நீ என் உபதேசத்திற்காகவும் உதவிக்காகவும் என்னை அடைந்தால், அவைகளை உடனே நான் உனக்கு கொடுப்பேன்.
11. என்னுடைய பக்தர்களுடைய வீட்டில் ஒரு போதும் தேவை என்பதே இருக்காது.

ஞாயிறு, 6 ஆகஸ்ட், 2017

சாந்தி மந்திரம்


"ஓம்"

ஓம் எனும் பிரணவ மந்திரமே சாந்தி மந்திரம். அகத்திய மகரிஷி ஓம் என்கிற பிரணவத்தை சொல்லியிருக்கிறார். பூமி தன்னைத்தானே சுற்றும் பொழுது ஓம் என்ற ஒலி உலகத்தில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. உலகம் சுழலும் போது ஏற்படும் சத்தம் தான் ஓம். 


ஓம் என்று தியானித்து வந்தோம் என்றால் உலக இயக்கத்தோடு நமது எண்ணங்களும் வெற்றியாகும்.








அஷ்ட சக்திகள்

  1. மோகனம் 
  2. வசியம் 
  3. ஸ்தம்பனம் 
  4. ஆகர்ஷணம் 
  5. உச்சாடனம் 
  6. பேதனம் 
  7. வித்வேடனம் 
  8. மாரணம் 

1. மோகனம் :- விரும்புதல் 







கடவுளுக்கான சான்று

ராமகிருஷ்ணர் 19-தாவது நூற்றாண்டின் கடைசியில்
வாழ்ந்தவர் மிகவும் வெகுளி. கேசவ் சந்திரசென் என்பவர் மிகவும் படித்தவர்,
பண்டிதர், அந்த கால கட்டத்தில் மிகவும் படித்த பண்டிதர்களில் ஒருவர். அவர்கள்
இருவரும் அருகருகில்தான் வாழ்ந்தனர். கேசவ் கொல்கத்தாவில் இருந்தார், ராமகிருஷ்ணர் கொல்கத்தா அருகே கங்கை நதிகரையோரம் இருந்த தக்ஷ்ணேஷ்வரில் இருந்த சிறிய கோவிலில் பூசாரியாக வேலை செய்தார்.
கேசவ் சந்திரா அவருடைய புத்திசாலித்தனம், அவருடைய
தர்க்க அறிவு, வாதத்திறமை, அவருடைய அறிவு, விவேகம், வேதநூல்களில் அவருக்கிருந்த புலமை ஆகியவற்றிற்க்காக நாடு முழுவதும் போற்றப்பட்டார். மக்கள் எல்லா இடங்களில் இருந்தும் வந்து அவர் காலடியில் அமர்ந்து அவர் பேச்சைக் கேட்டனர்.
இப்படி இவர் பேச்சைக் வருடக்கணக்கில் கேட்டுக்
கொண்டிருந்த மக்கள் தக்ஷிணேஷ்வர் கோவிலில் இருக்கும் ராமகிருஷ்ணரிடம் செல்வதை பார்த்து அவர் மிகவும் குழப்பமடைந்தார். அவருக்கு படிப்பறிவில்லை, எந்த வேதபுத்தகத்தைப்பற்றியும் எதுவும் தெரியாது, அவருக்கு அறிவு ஏதும் இருப்பதாகவே தெரிவதில்லை, அவருக்கு தர்க்கம் ஏதும் செய்ய தெரியாது, எதைப் பற்றியும் பேசி யாருக்கும் அவரால் புரிய வைக்கவும் முடியாது.
என்ன நடக்கிறது இங்கே என்று மிகவும் குழப்பமடைந்தார்
கேசவ். அவருடன் வருடக்கணக்கில் இருந்து அவர் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த மக்கள் இப்போது அங்கே செல்கின்றனர். அவரிடம் கூட்டம் கூடிக் கொண்டிருந்தது. கேசவ் கேள்விப்பட்ட வகையில் ராமகிருஷ்ணர் கிட்டத்தட்ட அரைப்பைத்தியம் போன்றவர். திடீரென ஆடுவார், பாடுவார். நல்லதொரு பாடலை கேட்டவுடன் சமாதி நிலை அடைந்து விடுவார். பல
மணி நேரங்களுக்கு அந்த சமாதி நிலை நீடிக்கும். அவர் அவருள் ஆழ்ந்து போய் விடுவார், அவரை யாராலும் எழுப்ப முடியாது. அது சாதாரண தூக்கமல்ல, அது கோமா போன்றது.
ஒரு முறை அவர் அது போன்று 6 நாட்களுக்கு இருந்தார்.
அவரை எழுப்ப எல்லோரும் இயன்றவரை முயன்று பார்த்தனர். ஆனால் எல்லாமே தோல்வியில்தான் முடிந்தது. அவரை யாராலும் எழுப்ப முடியவில்லை. 6 நாட்களுக்கு பின் எழுந்த அவர்
கண்களில் கண்ணீருடன், “ஏன் என்னை தொந்தரவு செய்கிறீர்கள் நான் என்னுள் ஆனந்தமாக இருந்தேன். என்னை வெளி உலகுக்கு இழுத்துக் கொண்டே இருந்தீர்கள், இங்கே ஒன்றுமே இல்லை. நான் எல்லாவற்றையும் அனுபவித்து பார்த்து விட்டேன். என்னுடைய சுயத்தை உணரவோ, முடிவற்ற ஆனந்தத்தை கொடுக்கவோ, அழிவற்ற பரவசத்தை அளிப்பதற்க்கோ  இங்குள்ள எதனாலும் முடியாது. அதனால் நான் எப்போதெல்லாம் நான் உள்ளே சென்றாலும் என்னை தொந்தரவு செய்யாதீர்கள். என்னை விட்டு விடுங்கள்”. என்று கூறினார். 6 நாட்கள் என்பது மிகவும் அதிகமான நாட்கணக்குதான். அவர் கோமாவில் இருந்தால் சீடர்கள் கவலைப்படாமல் என்ன செய்வார்கள்!.
இது போல கேசவ்வை வந்து சேர்ந்த செய்திகள் அனைத்துமே
இந்த ராமகிருஷ்ணர் ஒரு கிறுக்கு, மறைகழன்றவர், லூசு என்பதாகத்தான் இருந்தது. ஆனால் அவரிடம் வந்து அவர் சொல்வதை கேட்டுக் கொண்டிருந்த அனைவருமே மெத்த படித்தவர்கள், பேராசிரியர்கள், வேத விற்பன்னர்கள். அவர்கள் எப்படி இந்த ராமகிருஷ்ணரிடம் போனார்கள்?
இறுதியாக கேசவ் தானே போய் அவரை பார்ப்பது என்று
தீர்மானித்தார். பார்ப்பது மட்டுமல்லாமல் அவரிடம் வாதிட்டு அவரை தோற்கடிப்பது என்றும் நினைத்தார். அவர் ராமகிருஷ்ணருக்கு, “நான் இந்த தேதியில் வருகிறேன். தயாராக இருங்கள். நான் இறுதியான
விஷயங்களைப் பற்றி பேசி உங்களுடன் தர்க்கம் செய்யப் போகிறேன்.” என்று செய்தி அனுப்பினார்.
ராமகிருஷ்ணர் இதை கேள்விப்பட்டதும் சிரித்தார். “கேசவ் சந்திராவை சந்திப்பது மிகவும் மகிழ்ச்சி தரக்கூடிய விஷயம். அவர் மிகச் சிறந்த தர்க்கவாதி, புத்திசாலி. ஆனால் அவர் யாருடன் தர்க்கம் செய்யப்போகிறார் என்று அவருக்குத் தெரியவில்லை. வரட்டும், நான் இந்த போட்டியை ஒத்துக் கொள்கிறேன். இது ஒரு நல்ல காரணமாக இருக்கும்.” என்றார்.
அவரது சீடர்கள், “இது நன்றாக இருக்காது. நீங்கள் உங்கள் வாழ்க்கையில்
இதுவரை யாருடனும் போட்டியிட்டதேயில்லை. அவர் அவரது சீடர்களுடன் வரப் போகிறார். அத்தனை பேர் முன்னிலையிலும் …….. வேண்டாம் இந்த விஷப்பரீட்சை”. என்றனர்.
ஆனால் ராமகிருஷ்ணர் கூறியது எப்போதும் நினைவில் கொள்ள
வேண்டிய ஒன்று. அவர், “நான் வாதிடப் போவதில்லை, ஏனெனில் நான் வாதாடும் மனிதனல்ல. அவர் வரட்டும், எனக்கு சமய நூல்களைப்பற்றி தெரியாது, தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. எனக்கு உண்மை என்னவென்று தெரியும், நான் எதற்கு கடன்வாங்கப்பட்ட தகவலறிவைப் பற்றி கவலைப்பட வேண்டும்? நான் படிக்கவில்லை, எனக்கு எப்படி நிரூபிப்பது, அல்லது
நிரூபித்ததை உடைப்பது என்று தெரியாது, தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. என்னுடைய இருப்பே போதுமானது, அவர் வரட்டும்.” என்று கூறினார்.
கேசவ் சந்திரா இவருடைய இருப்பை எப்படி ஒரு வாதமாக ஏற்றுக் கொள்வார்  என்று சீடர்களுக்கு தெரியாததால் அவர்கள் பயந்தனர். கேசவ் சந்திரா வந்தார். ராமகிருஷ்ணர் வெளியே வந்து இவரை அணைத்து உள்ளே கூட்டிச் சென்றார். கேசவ் இப்படி இவர் வெளியே வந்து காத்திருந்து அணைத்து உள்ளே கூட்டிச் செல்வார் என்று எதிர்பார்க்கவேயில்லை. “நீங்கள் வந்ததற்கு மிகவும் நன்றி. நான் நீங்கள் வருவதற்காக காத்துக் கொண்டிருந்தேன். எப்போதெல்லாம் உங்களுக்கு என்னிடம் வாதிட தோன்றுகிறதோ அப்போதெல்லாம் நீங்கள் என்னிடம் வரலாம். என்னிடம் போட்டியிட நீங்கள் எப்போதும் வரலாம். முன்கூட்டியே சொல்லிவிட்டு வர வேண்டிய அவசியம் இல்லை. நான் எப்போதும் ப்ரீதான். நான் 24 மணி நேரமும் இந்த கோவிலிலேயேதான் இருப்பேன். நீங்கள்
இரவு பகல் எந்த நேரமும் வரலாம்”. என்றார்  ராமகிருஷ்ணர்.
கேசவ் தனக்குத்தானே எதற்காக வந்தோம் என நினைவு
படுத்திக் கொண்டார். அது மிகவும் கடினமானதாக இருந்தது. இவர் மிகவும் அன்பானவராக இருந்தார், இவரது அதிர்வே மிகவும் பிடித்தமானதாக இருந்தது. மேலும் ராமகிருஷ்ணர், “முதலில் உங்களது வாக்குவாதத்தை ஆரம்பிக்கும் முன்
உங்களை வரவேற்பதற்காக நான் நடனமாடுகிறேன்”. என்றார். அங்கே இருந்த அவரது இசைக்குழுவினர் வாத்தியங்களை வாசிக்க ஆரம்பித்தனர், இவர் நடனமாட ஆரம்பித்தார்.
கேசவ் சந்திரரால் நம்பவே முடியவில்லை. அவரது
சீடர்களாலும் நம்ப முடியவில்லை. சந்திரா பலருடன் வாக்குவாதம் செய்திருக்கிறார். நாடு முழுவதிலும் உள்ள பல பண்டிதர்களை போட்டியிட்டு வென்றிருக்கிறார். ஆனால் நடனம் மூலம் தன்னை வரவேற்ற ஒருவரை இதுவரை அவர் சந்திக்கவில்லை. மேலும் நடனம் மிகவும்
அற்புதமாக இருந்தது. அது ஒரு பொங்கிப் பெருகும் அன்பின் அடையாளமாக இருந்தது. அது சாதாரணமானதாக இல்லை, அது வரவேற்பின் உச்சகட்டம். கேசவ் சந்திரர் கூட இவர் சத்தியமானவர் என்பதை உணர்ந்தார்.
நடனம் முடிந்த பின் ராமகிருஷ்ணர் “இப்போது நீங்கள் ஆரம்பிக்கலாம்” என்று கூறினார். கேசவ் சந்திரா, “நீங்கள் முதலில் கடவுள் இருக்கிறார் என்பதை எனக்கு
நிரூபிக்க வேண்டும்” என்றார்.
ராமகிருஷ்ணர் சிரித்தார். “கடவுள் இருப்பதற்க்கு சான்றா ? நீதான் சான்று.! இல்லாவிடில் எங்கிருந்து இவ்வளவு விவேகம் வந்தது? இது உறுதியாக பிரபஞ்சத்திலிருந்துதான் வந்திருக்க வேண்டும், பிரபஞ்சத்தால் கேசவ் சந்திரா போன்றவரை உருவாக்க முடியும் என்றால் அது தன்னுணர்வற்றது அல்ல, அது விவேகமற்றதுமல்ல. இதைத்தான் நாம் கடவுள் என்றழைக்கிறோம்.
எப்படி அழைக்கிறோம் என்பது பொருட்டல்ல. நீதான் சான்று. நீதான் சான்று என்பதை அறியாமல் நீயே சான்று கேட்பதுதான் இதில் விந்தை. நான் யாரை வேண்டுமானாலும் கொண்டு வந்து நிறுத்துகிறேன், நீதான் சான்று என்பதை எல்லோரும் ஒத்துக் கொள்வர். நாம் கடவுள் என்றழைப்பது பிரபஞ்சம் புத்திசாலித்தனத்தோடு இருப்பதுதான், பிரபஞ்சம் தன்னுணர்வின்றி
இருப்பதில்லை. என்றார்.
கேசவ் சந்திராவின் சீடர்கள் கேசவ் சந்திரா இவ்வளவு
அதிர்ச்சியடைந்து பார்த்தேயில்லை. அவர் மௌனமாகிவிட்டார், என்ன சொல்வதென்றே அவருக்கு தெரியவில்லை. ராமகிருஷ்ணரின் சீடர்கள்கூட அதிர்ச்சியடைந்து விட்டனர். அவர்கள், “அடக் கடவுளே, எப்படி இவர் அவருடன் வாதிடப் போகிறாரோ என நாம் நினைத்தோம், ஆனால் இவர் எந்த சிரமுமில்லாமல் அவரை வாயடைக்கச் செய்து விட்டாரே,
எந்த புத்தகத்திலிருந்தும் மேற்கோள் எதுவும் காட்டவில்லை, கேசவ் சந்திராவே தனக்கு எதிரான வாதத்தை செய்து கொண்டு விட்டார்” என்று பேசிக் கொண்டனர்.
ஒவ்வொரு முறை கேசவ் சந்திரா எதையாவது மிக நன்றாக
சொல்லும் போது ராமகிருஷ்ணர் ஒரு குழந்தை போல கை தட்டி பாராட்டுவார். ஆனால் தனக்கு எதிராக தானே விஷயங்களை சொல்லிக் கொண்டிருக்கிறோம் என அவர் நினைக்கவேயில்லை.
சீடர்கள், “நான் அவருக்கு எதிராக வாதம் புரிந்து கொண்டிருக்கிறேன், அவர்
மகிழ்ச்சியாக கை தட்டிக் கொண்டிருக்கிறார், அவருகென்ன பைத்தியமா என கேசவ் சந்திரா நினைத்தார்” என கூறிக் கொண்டனர்.
வாக்குவாதம் நடந்து கொண்டிருந்தபோது இடையில்
ராமகிருஷ்ணர் எழுந்துவந்து கேசவ்வை கட்டிதழுவிக் கொண்டு, “இது மிகவும் அற்புதமான பாயிண்ட். எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. நீங்கள் தொடருங்கள்” என்று கூறினார். எந்த வாக்குவாதமும் செய்ய வேண்டிய
தேவையேயில்லாமல் அவரிடம் இருந்த அந்த சந்தோஷம், அந்த அன்பு, அந்த அசைக்க முடியாத அமைதி இவைதான் அவருடைய வெற்றியாக அமைந்தன.
கேசவ் சந்திரா ராமகிருஷ்ணரின் பாதங்களில் வீழ்ந்து
பணிந்து “என்னை மன்னித்துவிடுங்கள். நான் உங்களைப் பற்றி தவறாக புரிந்து
கொண்டிருந்தேன்” என்றார்.
ராமகிருஷ்ணர், “என்ன இது நீங்கள் மிகவும் படித்தவர், நான் படிக்காதவன்.
படிப்பறிவில்லாதவன், வெகுளி, என்னால் எனது பெயரைக் கூட எழுத முடியாது. எனக்கு என்னைத் தெரியும், ஆனால் எனக்கு கையெழுத்திடத் தெரியாது, எனக்கு படிக்கத் தெரியாது. நீங்கள் இப்படி செய்ய வேண்டியதில்லை” என்றார்.
கேசவ் சந்திரா ராமகிருஷ்ணரின் பக்தர்களில் ஒருவராக
மாறிவிட்டார். ராமகிருஷ்ணரிடம் எந்த கேள்விக்கும் பதில் இல்லை, அவரிடமும் எந்த கேள்வியும் இல்லை. ஆனால் அவரது வெகுளித்தனமும் எளிமையும் பல பேரை கவர்ந்தது, பலபேரை மாற்றியது. அவருடைய அன்பே மிகப்பெரிய இரசாயனமாற்றத்தை தந்தது.
Source : Beyond Psychology # 18 Q.2

புதன், 2 ஆகஸ்ட், 2017

இராசி பலன், ஆகஸ்ட் 2


இராசி நட்சத்திரம் பலன் 
மேஷம் 
அசுவினி
பரணி
கார்த்திகை 1
 செயல்களில் கவனமாக இருப்பது நல்லது.
பணிச்சுமையால் உடல் நலம் கெடும்.
கடின உழைப்புடன் வெற்றி அடைவீர்கள்.
ரிஷபம் 
கார்த்திகை 2,3,4
ரோகிணி 
மிருகசீரிடம் 1,2
பேச்சில் இனிமை, சாதுர்யம் இவற்றால் காரியம் கைகூடும்.
பிள்ளைகளால் மனநிம்மதி கிடைக்கும்.
தொழிலில் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் வரும்.
மிதுனம் 
மிருகசீரிடம் 3,4
திருவாதிரை 
புனர்பூசம் 1,2,3
புத்திகலக்கம், மனக்கஷ்டம் ஏற்படும். 
பயணத்தடங்கல், சகோதரர்களால் பிரச்னை உண்டாகும்.
வருமானம் உயரும், குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடத்த திட்டமிடுவீர்கள்.
கடகம் 
புனர்பூசம் 4
பூசம் 
ஆயில்யம்
தாய்க்கு உடல்நலம் பாதிக்கும், பணவரவு உண்டாகும்.
உடல்நலத்தில் கவனம், புதியமுயற்சிகள் வேண்டாம்.
பிள்ளைகளால் ஆடம்பரச்செலவு ஏற்படும்.
சிம்மம் 
மகம் 
பூரம் 
உத்திரம் 1
வியாபார வளர்ச்சிபணியில் தாமதம் ஏற்படும், நண்பர்கள் உதவுவர்.
யாருக்கும் வாக்குறுதி தரவேண்டாம், விமர்சனங்களுக்கு ஆளாக நேரும்.
தொழிலில் போட்டி குறையும், லாபம் உயரும்.
கன்னி 
உத்திரம் 2,3,4
அஸ்தம்  
சித்திரை 1,2
சகோதர வகையில் நன்மை உண்டாகும் .
புதிய நண்பர்கள் சேர்க்கை, பெற்றோரின் அன்பும் ஆசியும் கிடைக்கும்..
மனதில் தைரியம், வண்டி வாகன சுகம் அடைவர்.
துலாம் 
சித்திரை 3,4
சுவாதி 
விசாகம் 1,2,3
பணவரவு, குடும்பசுகம் சுமாராக இருக்கும்..
வீண்பயம், உடற்சோர்வுகள் ஏற்படும் .
நிலுவை பணம் வரவாகும், நிம்மதி உண்டாகும்.
விருச்சிகம் 
விசாகம் 4
அனுசம் 
கேட்டை 
நல்லவர்களின் நட்பால் நன்மை அடைவீர்கள் .
தேக சௌக்யம், தொழிலில் போட்டி குறையும்.
வாகனயோகம், மனதிருப்தி ஏற்படும்.
தனுசு 
மூலம் 
பூராடம் 
உத்திராடம் 1

தொழிலில் இடைஞ்சல் இருக்கும், நண்பர்களின் ஆலோசனை கேட்பது நன்று.
பெண்களால் பண விரயம் ஏற்படும்.
அரசு உதவி கிடைக்கும், நல்லது கெட்டது அறிந்து கவனத்துடன் செயல்படவும்..
மகரம் 
உத்திராடம் 2,3,4
திருவோணம் 
அவிட்டம் 1,2
நண்பர்கள், வாழ்க்கைத்துணைவர்களால் நன்மை அடைவீர்கள்.
இஷ்டதெய்வ வழிபாடு செய்யவும், நோய் நீங்கி சுகம் அடைவீர்கள். 
பேச்சு, செயலில் தைரியம் மிகும், கல்வியில் வெற்றி உண்டாகும்.
கும்பம் 
அவிட்டம் 3,4
சதயம் 
பூரட்டாதி 1,2,3
வியாபாரத்தில் வளர்ச்சி உண்டாகும், பதவி உயர்வு கிட்டும்.
\உத்தியோகவாய்ப்பு, நல்ல திருப்பங்கள் ஏற்படும்.
முக்கியஸ்தர்களின் பணஉதவி, சாஸ்திர தேர்ச்சி, புத்திதெளிவு உண்டாகும்.
மீனம் 
பூரட்டாதி 4
உத்திரட்டாதி 
ரேவதி 
தெய்வபலம் கிடைக்கும், செயலில் தைரியம் நிறைந்து இருக்கும்.
பிரயாணம் ஏற்படும், லாபம் மிதமாக இருக்கும்.
திட்டமிட்ட பணிகள் தாமதமாக நிறைவேறும்.


நலம் பெரும் நட்சத்திரக்காரர்கள் :  அஸ்தம் , சுவாதி , அனுஷம்  

விழிப்புடன் இருக்கவேண்டிய நட்சத்திரக்காரர்கள் :  உத்திரம் , பூரம்   

சந்திராஷ்டமம் : பரணி ,கார்த்திகை   

சூலம் : வடக்கு 

செவ்வாய், 1 ஆகஸ்ட், 2017

இராசி பலன், ஆகஸ்ட் 1


இராசி நட்சத்திரம் பலன் 
மேஷம் 
அசுவினி
பரணி
கார்த்திகை 1
நண்பர்களால் நன்மை ஏற்படும். 
அரசாங்க ஆதாயம் கிடைக்கும்.
வாகன, போஜன சுகங்கள் கிடைக்கும்.
ரிஷபம் 
கார்த்திகை 2,3,4
ரோகிணி 
மிருகசீரிடம் 1,2
பிரயாணத்தில் நன்மை கிடைக்கும்.
  நோய்கள் நீங்கும், சத்ரு ஜெயம் உண்டாகும்.
தன வரவு கூடும்.எதிரிகள் பணிவர்.
மிதுனம் 
மிருகசீரிடம் 3,4
திருவாதிரை 
புனர்பூசம் 1,2,3
சுபச்செலவுகள் உண்டாகும்.
அஜீரணக்கோளாறு, அந்தஸ்து குறைவு ஏற்படும்.
வகுக்கும் செலவுக்கும் சரியாக இருக்கும்.
கடகம் 
புனர்பூசம் 4
பூசம் 
ஆயில்யம்
வீட்டில் நிம்மதி குறையும். பணம் வரும்.
பிறருடைய காரியங்களில் குறுக்கிட வேண்டாம்.
ஆத்ம நண்பருடன்  போக்கு அமையும்.
சிம்மம் 
மகம் 
பூரம் 
உத்திரம் 1
சகோதரர்களால் நன்மை அடைவீர்கள்.
நண்பர்களால் செலவுகள் ஏற்படும்.
மனதில் தைரியம் உற்சாகம் உண்டாகும்.
கன்னி 
உத்திரம் 2,3,4
அஸ்தம்  
சித்திரை 1,2
எல்லா முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும்.
வழிபாட்டினால் நன்மை உண்டாகும்.
கல்வி, வண்டி வாகனசுகம் ஏற்படும்.
துலாம் 
சித்திரை 3,4
சுவாதி 
விசாகம் 1,2,3
தாயாருக்கு மருத்துவ  செலவும்,வாகன செலவும் உண்டாகும்.
சகோதர வகையில் செலவுகள் ஏற்படும்.
புத்தாடை, பணவரவு, தானிய விருத்தி ஏற்படும்.
விருச்சிகம் 
விசாகம் 4
அனுசம் 
கேட்டை 
புத்தி சாதுர்யம் உண்டாகும். பாக்கிய விருத்தி.
உடல் ஒளிபெறும். திரவியங்கள் சேரும். ஆராய்ச்சியும், தேர்ச்சியும் ஏற்படும்.
ஆத்ம திருப்தி, பணவரவு, பயணங்கள் ஏற்படும்.
தனுசு 
மூலம் 
பூராடம் 
உத்திராடம் 1
வீண்செலவு, பணத்தட்டுப்பாடு இருக்கும்.
மௌனத்தை கடைபிடிக்கவும்.
பிரச்சனைகள் தீரும். நிம்மதி கிடைக்கும்.
மகரம் 
உத்திராடம் 2,3,4
திருவோணம் 
அவிட்டம் 1,2
எல்லா வகையிலும் நன்மை அடைவீர்கள்.
பிறருக்கு உதவி செய்யுங்கள். சுகம் உண்டாகும்.
கல்வியில் வெற்றி, போஜன சுகம், பதவி உயர்வு அடைவீர்கள்.
கும்பம் 
அவிட்டம் 3,4
சதயம் 
பூரட்டாதி 1,2,3
 அரசாங்க ஆதரவு, காரிய அனுகூலம் உண்டாகும்.
முன்னேற்ற வாய்ப்புகள், விருப்பங்கள் கைகூடும்.
தன, குடும்ப சம்பந்தமான காரியங்களில் பயன் அடைவீர்கள்.
மீனம் 
பூரட்டாதி 4
உத்திரட்டாதி 
ரேவதி 
வாழ்க்கையில் நல்ல திருப்பங்கள் அமையும். தெய்வ நம்பிக்கை ஏற்படும்.
புண்ணிய காரியங்களில் ஈடுபடவும். பாக்யவிருத்தி உண்டாகும்.
தெய்வ பக்தியால் சுகபோகம் அமையும்.


நலம் பெரும் நட்சத்திரக்காரர்கள்  உத்திரம், சித்திரை, விசாகம் 

விழிப்புடன் இருக்கவேண்டிய நட்சத்திரக்காரர்கள் :  மகம், பூரம் 

சந்திராஷ்டமம் :  அசுவினி, பரணி 

சூலம் : வடக்கு